மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 33 Second

court_37பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மகேசி பிரியதர்சினி த சில்வா எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து குறித்த சிறுமி பாடசாலையில் தனது சிநேகிதியிடம் தெரிவித்துள்ளார்.

மாணவியின் சிநேகிதியால் குறித்த சம்பவம் வகுப்பாசிரியையிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து வகுப்பாசிரியை பசறைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இப் புகாரையடுத்து பசறைப் பொலிசார் சிறுமியின் தந்தையை கைதுசெய்து பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்து அவரது மருத்துவ அறிக்கைய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிபதி பசறைப் பொலிசாரைப் பணித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்!!
Next post வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!