வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!
Read Time:1 Minute, 22 Second
ஊவா மாகாண சுகாதார அமைச்சில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணெருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளையைச் சேர்ந்த அனோஜா ஆரியமாலா என்ற இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடையைச் சேர்ந்த இளைஞரொருவரிடம் மாகாண சுகாதார அமைச்சில் தொழில் பெற்றுத் தருவதாகக்கூறியே குறித்த பெண் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்று தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் பதுளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த பெண்ணிடமிருந்து தொழில் வழங்கப்படுவதற்கான போலி ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating