வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 11 Second
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள மதவகுறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது30). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கரடிராமர் (35), ஆறுமுகம் (31) ஆகியோர் அங்கு வந்தனர். திடீரென்று செண்பக வள்ளியின் வீட்டில் சுவர் ஏறி குதித்த அவர்கள் செண்பகவள்ளியை பலவந்தமாக கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது. உடனே அவர் கூச்சல் போட்டார்.
இதனால் 2 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். நடந்த சம்பவத்தை செண்பகவள்ளி தனது கணவரிடம் தெரிவித்தார். பின்பு இதுபற்றி மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். கரடிராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating