கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவி சித்ரவதை: கணவர் கைது!!
Read Time:1 Minute, 14 Second
கோயம்பேடு நெற்குன்றம் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பவித்திரா (23) என்ஜினீயர். இவருக்கும் துரைப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (29) என்பவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்திராவை கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தோஷ் அடித்து உதைக்க தொடங்கினார்.
இது குறித்து பவித்திரா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
விசாரணையில் சந்தோஷ் ஏற்கனவே பாண்டிச்சேரியில் மதுமிதா என்ற பெண்ணை திருமணம் செய்து பிரிந்து இருப்பது தெரிந்தது.
இதேபோல் சந்தோஷ் வேறு யாரையும் திருமணம் செய்து ஏமாற்றினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating