சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!!
Read Time:1 Minute, 21 Second
சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.
இதனால் தூதர் பிரதேசங்களில் இருந்து சேவைக்கு வரும் சிறை ஊழியர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் விரைவில் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Average Rating