பெரம்பலூரில் இலங்கை தமிழர்கள் நால்வருக்கு அடி!!

Read Time:2 Minute, 10 Second

456652960downloadபெரம்பலூரில் கட்டிட தொழிலாளர்களுக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழு மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. திருச்சியை சேர்ந்த, பத்துக்கும் மேற்பட்டோர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை, அந்தப்பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அருகே சமையல் செய்து கொண்டிருந்தனர்.

இதையறிந்த கட்டுமான பணியாளர்கள், அப்பகுதியில் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளர்கள், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில், சந்திரகுமார், 34, சந்திரசேகர், 26, புஷ்பராஜா, 24, நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த ராஜ், 41 ஆகியோர் காயமடைந்தனர். இதையறிந்த முகாமை சேர்ந்த, இருநூறுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று, கட்டிட தொழிலாளர்களை தாக்க முயன்றனர். அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

தகவலறிந்த பெரம்பலூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?
Next post விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!