திருவண்ணாமலை அருகே மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்!!
Read Time:48 Second
திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி லூர்துமேரி(வயது 22). கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் குழந்தையின் அருகே படுத்திருந்த லூர்து மேரியை காணவில்லை.
இது குறித்து தச்சம்பட்டு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லூர்து மேரியை தேடி வருகின்றனர்.
Average Rating