தந்தையைக் காணவில்லை! மகள் முறைப்பாடு!!
மட்டக்களப்பு – மயிலம்பாவெளிப் பகுதியிலிருந்து காணாமல் போன தனது வயோதிபத் தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு, மகள் ஜோசப் சிறியானி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு வி.சி.றோட் கொலனியைச் சேர்ந்த இராமசாமி ஜோசப் (வயது 73) என்பவர், கடந்த 31.12.2013 அன்று காணாமல் போனதாகவும், இது விடயமாக உடனடியாகவே ஏறாவூர் பொலிஸில் முறையிட்டதாகவும் ஆயினும் இதுவரை தேடிப்பார்த்தும் தந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மகள் சிறியானி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று (31) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற தந்தை இதுவரை என்ன ஆனார் என்று தெரியவில்லை எனவும் சிறியானி கூறினார்.
இதேவேளை, குறித்த முறைப்பாடு சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என்று மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
Average Rating