பெறுமதிமிக்க வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது!!
Read Time:1 Minute, 0 Second
வல்லப்பட்டைகளுடன் பயணித்த இருவர் தெனியாய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெனியாய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே, இந்த வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
30 கிலோ 185 கிராம் வல்லப்பட்டைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றின் பெறுமதி நான்கு இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரமாகும்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெனியாய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating