கடிதம் எழுதுவதால் தீர்வு கண்டுவிட முடியாது!!
Read Time:1 Minute, 10 Second
தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மூலமாகவே தீர்வு கண்டுவிட முடியும் என்று தமிழக அரசு தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக மீனவர் பிரச்சினையில் தமிழக அரசு கடிதம் எழுதுவதால் மட்டுமே தீர்வு கிடைக்காது. மாநில அரசு, மத்திய அரசிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி மீனவர் பிரச்சினைக்கு ஒரு ஆக்கப்பூர்வ தீர்வை காண வேண்டும்.
மத்திய அரசும் வெளியுறவுத்துறை மூலமாக இலங்கை அரசிடம் பேசி, பறிமுதல் செய்யப்பட்ட 75 படகுகள் மற்றும் மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Average Rating