அதிவேக வீதியில் மேலும் 43 பஸ்களுக்கு அனுமதி!!
Read Time:44 Second
தெற்கு அதிவேக வீதியில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிதாக 43 பஸ்களுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி – மாத்தறை நோக்கி பயணிக்க 28 வீதி அனுமதிப் பத்திரங்களும், மாத்தறை – கடுவெல நோக்கி பயணிக்க 15 அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating