குடித்துவிட்டு கும்மாளம்: ஷர்மிளா, சைப் அலி கானுக்கு நோட்டீஸ்!!

Read Time:2 Minute, 10 Second

Untitled-116அரியானா மாநிலத்தில் கடந்த 15-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று (19) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வரும் 22-ம் திகதி வரை இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இந்நிலையில், அரியானாவின் முன்னாள் நவாப், பட்டவ்டியின் வம்சத்தை சேர்ந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டவ்டியின் மனைவியும் முன்னாள் பாலிவுட் கதாநாயகியுமான நடிகை ஷ்ர்மிளா தாகூர், தனது மகன் சைப் அலி கான் பட்டவ்டியுடன் சேர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள பட்டவ்டி தொகுதியில் உள்ள தனது அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு சிலருக்கு மது விருந்து அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மிகுந்த ஓசை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி, அரண்மனையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஷர்மிளா தாகூரும், சைப் அலி கானும் இடையூறு செய்ததாக அங்குள்ள பொதுமக்கள் பட்டவ்டி தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் மது விருந்து அளித்ததற்கும் வரும் 21-ம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஷர்மிளா தாகூருக்கும், அவரது மகனான பாலிவுட் கதாநாயகன் சைப் அலி கானுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்!!
Next post இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் உசேன் திட்டமிட்டாரா?