வாஸ் குணவர்த்தன வழக்கில் 29ஆம் திகதி தீர்ப்பு!!
பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு பிரதான சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தங்கள் சார்பான வழக்கை மேல் நீதிமன்றில் விசாரிக்க அதிகாரம் இல்லை என்பதால் விடுதலை செய்யுமாறு கோரி வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
ஆனால் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை சாதாரண சட்டத்தின்படி முன்னெடுக்கப்படுவதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
எனவே சந்தேகநபர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என சட்டத்தரணி வாதிட்டார்.
இருபக்க கருத்துகளையும் கேட்டறிந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு வழக்கின் தீர்ப்பு 29ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Average Rating