‘கத்தி’ பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. குண்டு சத்தம்!!
Read Time:1 Minute, 7 Second
கத்தி படத்திற்கு பிரச்சனை நாளுக்கு நாள் வலுவாகிறது. தீபாவளி அன்று படம் வெளிவரும் என அறிவித்த நிலையில் சில அமைப்புகள் படத்திலிருந்து லைகாவை நீக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக தெரியவில்லை. இதனால் கோபமடைந்த சிலர் சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
மேலும் சரமாரியாக கல் வீசி தியேட்டரின் முகப்புகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இது மட்டுமின்றி தமிழகத்தில் படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்குகளிலும் இது போல் நடக்குமா? என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.
இதனால் கத்தி படம் வெளிவருவது மிகவும் கடினம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Average Rating