ஆஸி. அகதிகளை நடத்தும் விதம் குறித்து முறைப்பாடு!!
Read Time:1 Minute, 24 Second
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களை அந்த நாட்டு அரசாங்கம் கையாளும் விதம் குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்ரூ வில்கியினால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கையாளும் விதத்தால் அவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் இதனை நிராகரித்துள்ளார்.
Average Rating