யாழ். கடற்பரப்பில் இவ் வருடம் 420 மீனவர்கள் கைது!!
Read Time:1 Minute, 0 Second
கடந்த 10 மாத காலப்பகுதியில் யாழ். மாவட்ட கடற்பரப்பில் 420 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, யாழ் மீனவ பரிசோதனை அலுவலக உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட தென்னிந்திய மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய 400 மீனவர்கள் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை 20 மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கனேஷமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating