கோவாவில் கற்பழிக்கப்பட்ட ரஷியப்பெண்: மருத்துவ பரிசோதனையின் போது டாக்டரும் பாலியல் கொடுமை!!
கோவா வந்த ரஷிய நாட்டு பெண் சுற்றுலாப்பயணி, இருமுறை கற்பழிக்கப்பட்டார். சுற்றுலாப் பயணி ரஷியாவின் மின்ஸ்க் என்ற இடத்தைச் சேர்ந்த 32 வயது பெண் கோவாவுக்கு கடந்த வாரம் சுற்றுலா வந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தார். கடந்த 20-ந் தேதி அவர் கோவாவில் புகழ்பெற்ற பாகா கடற்கரையில் இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம மனிதன் வந்து ரஷியப் பெண்ணை மிரட்டி கற்பழித்தான். பின்னர் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விட்டான்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலில் பெண் டாக்டர் ரஷியப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினார். அதன்பிறகு ஆண் டாக்டர் ஒருவர் மீண்டும் பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரஷியப் பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ரஷியப் பெண் உள்ளூர் வக்கீல் விக்ரம்வர்மா மூலம் மீண்டும் புகார் செய்தார். அவர் நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்தினார். மருத்துவ அதிகாரி இது பற்றி மாநில மருத்துவத்துறை உயர் அதிகாரி கூறுகையில், ரஷிய பெண்ணை மருத்துவ பரிசோதனையின் போது கற்பழித்ததாக கூறப்படும் டாக்டர் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். அவர் முதன்மை மருத்துவ அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் என்று தெரிவித்தார்.
மருத்துவ மனையில் நடந்த சம்பவம் பற்றி கண்காணிப்பாளர் மாநில மருத்துவ துறைக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதன் பேரில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரஷியப் பெண்ணுக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. இதனால் அவர் சொல்வது யாருக்கும் புரியாமல் வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதமாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடற்கரையில் மிரட்டி கற்பழித்து கொள்ளையடித்துச் சென்றவனை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறினார்கள்.
Average Rating