மாமாவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி!!
14 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து, அவருடன் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்ய ஆணைமடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆணைமடு – ஆடிகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 28 வயதான சந்தேகநபர் சிறுமியின் மாமா எனவும் தெரியவருகின்றது.
தந்தை வேலை நிமித்தம் வௌிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமி தாயுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி தாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்னால் வைத்து முதல் முறையாக சந்தேகநபர் தன்னுடன் உறவு கொண்டதாக சிறுமி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகளுக்கு சந்தேகநபரால் இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த தாய் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. சிறுமி பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆணைமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating