அடுத்த மாதம் மோடியை சந்திப்பாரா விக்னேஸ்வரன்?
Read Time:1 Minute, 13 Second
அடுத்த மாதமளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைக்க டெல்லி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
நவம்பர் 9ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சொற்பொழிவாற்ற சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் எனும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விக்னேஸ்வரனும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எனினும் வட மாகாண முதல்வர், மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது தொடர்பில் உறுதியான நிலை ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
Average Rating