ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் மணி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த காஜாமுகைதீன் என்பவரின் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது கடையின் உரிமையாளர் காஜாமுகைதீன் மகள் சபீனாபானுவுக்கும் (வயது 19), மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை அறிந்த காஜாமுகைதீன் மணியை கண்டித்துள்ளார். மேலும் காதலை கைவிட்டு விடும்படி மகளிடம் கூறி உள்ளார்.
காதலுக்கு சபீனாபானுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இருவரும் திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதினர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கோரி நேற்று காலை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். மணியின் பெற்றோர் இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியதன் பேரில், போலீசார் அவர்களுடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
சபீனாபானுவின் பெற்றோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் வருவதாகவும், மகளின் விருப்பப்படி வாழ தடை தெரிவிக்க மாட்டோம் எனவும் போனில் தகவல் தெரிவித்தாக போலீசார் கூறினர்.
Average Rating