ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!!
ஈரான் உளவுத்துறையில் பணியாற்றியவர் மோர்டெசா அப்தொலாலி சர்பந்தி. இவர் அங்கு ரெய்ஹெனே ஜப்பாரி (வயது 26) என்ற பெண்ணை கடந்த 2007-ம் ஆண்டு கற்பழிக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த ஜப்பாரி, சர்பந்தியை கொலை செய்தார்.
இதையடுத்து கொலை வழக்கில் ஜப்பாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த டெஹ்ரான் நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேல்-முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இருப்பினும், அவரது மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என உலகமெங்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரசார இயக்கம் நடந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட சர்பந்தி குடும்பத்தினரின் ஆதரவை ஜப்பாரி பெற முடியவில்லை.
இந்த நிலையில், ஜப்பாரி நேற்று தூக்கிலிடப்பட்டார். இதை அவரது தாயார் ஷோலே பக்ரவன் நேற்று உறுதி செய்தார். மகளின் உடலை ஒரு மணி நேரம் பார்க்க ஷோலேக்கு ஈரான் அரசு அனுமதி அளித்தது.
Average Rating