மீறியபெத்த மண்சரிவு – மற்றொரு சடலம் மீட்பு!!
Read Time:55 Second
பதுளை – கொஸ்லாந்தை – மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்த மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் மூன்றாவது நாளாக இடம்பெற்றது.
இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இது நான்காவது சடலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating