இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி?
Read Time:1 Minute, 16 Second
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று, இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பல் நுழைய இலங்கை அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
வியட்நாம் பிரதமர் நுகுயென் டான் டங்கின் இந்திய விஜயத்தின் பின்பு, சீனா தனது நீர்மூழ்கி கப்பலை இரண்டாவது முறையாக இலங்கைக்குள் அனுப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்தியா தனது கடும் எதிர்ப்பை இம்முறை தெரிவிக்கும் என்று இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Average Rating