மகளை துஷ்பிரயோகம் செய்தவனை விருந்து வைத்துக் கொன்ற தந்தை!!
இந்தியாவில் தந்தை ஒருவர் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்ற குற்றவாளியை, விருந்துக்கு அழைத்துச் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது,
டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 45 வயதுக்காரர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இதை யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டி உள்ளார். ஆனால் இதுகுறித்து அன்றைய தினமே சிறுமி தந்தையிடம் கூறிவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை நிதனாமாக திட்டம் தீட்டி குற்றவாளியை இரவு விருந்துக்கு அழைத்துள்ளார். இதை நம்பி குற்றவாளியும் விருந்து உண்ண வந்துள்ளார்.
வயிறு முட்ட உணவு உண்டவுடன் தந்தை குற்றவாளியை அவர் உட்கார்ந்த சேரிலேயே கட்டி போட்டுள்ளார். பின்னர் குறடை சூடுபடுத்தி குற்றவாளியின் பிறப்புறுப்பை துண்டித்துவிட்டார். இதில் துடிதுடித்து குற்றவாளி அதே இடத்தில் பலியானார்.
பின்னர் பொலிஸ் நிலையம் சென்ற அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்துள்ளார். பொலிஸார் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Average Rating