திண்டிவனத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 0 Second
திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பொம்மி (வயது 24), திருமணமாகாதவர்.
இவர் இன்று காலை 11.30 மணிக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெண் போலீஸ் பொம்மி எதற்காக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating