யாழில் விபச்சாரம் – அறுவர் கைது!!
Read Time:1 Minute, 24 Second
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட ஏழ்வரை கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த பெண்ணும், அவரை விபச்சாரத்திற்காக அழைத்து வந்தவர்கள், இந்த நடவடிக்கைகளுக்கு இடம்கொடுத்த ஹோட்டல் ஊழியர்கள் என அறுவரே நேற்றையதினம் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய மற்றைய அனைவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating