வடமராட்சிப் பகுதியில் 73 வயது முதியவரும் 65 வயது வயது மூதாட்டியும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை!!!
Read Time:1 Minute, 15 Second
யாழ்ப்பாணத்தில் 73 வயது முதியவா் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா்.
இவா் தற்கொலை செய்ததற்கு என்ன காரணம் எனின் தனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது மூதாட்டியுடன் காதல் தொடா்பு இருப்பதாக முதியவரின் மனைவி முதியவரை ஏசியதாலேயே ஆகும்.
முதியவா் மனைவியின் ஏச்சைக் கேட்டு துாக்கில் தொங்கியால் கோபமடைந்த முதியவரின் மனைவியும் உறவினா்களும் அயல்வீட்டில் வசித்து வந்த 65 வயதான அந்த மூதாட்டியை ஏசியதால் அந்த மூதாட்டியும் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை 16 வயதுச் சிறுவன் ஒருவன் தனது காதலியை காதலியின் தந்தை அடித்ததாகத் தெரிந்து நஞ்சருந்தி கடந்த 5 நாட்களாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான்.
Average Rating