தென்காசி அருகே அண்ணியை கற்பழித்த வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 20 Second
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடியை அடுத்த கிழாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 26). இவரது கணவர் கருப்பசாமி திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இறந்து விட்டார். காளியம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் காளியம்மாள் வீட்டுக்கு அவரது கணவர் கருப்பசாமியின் தம்பி தங்கபாண்டி என்ற தங்கராஜ் (24) அடிக்கடி சென்று உதவிகள் செய்து வந்துள்ளார். அப்போது தங்கராஜ், காளியம்மாளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் காளியம்மாள், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தங்கராஜிடம் கேட்டுள்ளார்.
ஆனால் தங்கராஜ் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். இது குறித்து காளியம்மாள், ஆய்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating