கம்பத்தில் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொண்ட தந்தை-மகன்!!
Read Time:1 Minute, 2 Second
கம்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(வயது50) விவசாயி. நேற்று கந்தசாமி மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். இதனை பார்த்த அவரது மகன் சிவகுருநாதன் தந்தையை கண்டித்தார்.
அவரையும் கந்தசாமி தாக்கி கத்தியால் குத்தினார். இதனால் கோபம் அடைந்த சிவகுருநாதனும் தந்தையை கத்தியால் குத்தினார். இதில் 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கம்பம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை–மகன் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating