செய்யாறில் 2 மாணவிகள்-இளம்பெண் மாயம்!!
Read Time:1 Minute, 9 Second
செய்யாறு டவுன் அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவரது மகள்கள் அகல்யா (வயது 21) திருமணமான இவர் தந்தை வீட்டில் உள்ளார்.
சிந்துகவி (வயது 17) செய்யாறு அரசு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் நரசிம்மன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (14) 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 10–ந் தேதி பள்ளிக்கு சென்ற சிந்துகவி, பிரியதர்ஷினி வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது தான் சிந்துகவியின் அக்கா அகல்யாவும் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு டவுன் போலீசில் புகார் செய்தனர்.
3 பேரும் எங்காவது சென்று விட்டார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating