திட்டக்குடி அருகே 500 ரூபாய்க்காக விவசாயியை கொன்ற கூலிப்படையினர்!!

Read Time:2 Minute, 42 Second

ad92db4a-aa31-44d7-a57a-ec6d66b30731_S_secvpfதிட்டக்குடி அருகே ராமநத்தத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 43), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (33) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று தங்கராசு வீட்டு வராண்டாவிலும், பரமேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் வீட்டின் அறையிலும் தூங்கினர்.

மறுநாள் காலையில் தங்கராசுவை யாரோ வெட்டி கொன்று விட்டதாக பரமேஸ்வரி அலறினார். இதையடுத்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கொலையில் பரமேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனை தனது கள்ளகாதலன் ரவிச்சந்திரன் உதவியோடு கூலிப்படை மூலம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பரமேஸ்வரியும் அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண்ணாடத்தை சேர்ந்த கூலிப்படைத்தலைவன் சுவிட்லின் மூலம் தங்கராசுவை கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து சுவிட்லின் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இதில் சுவிட்லின் கூட்டாளிகளான 3 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்த ரமேஷ் (35), கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த நரேஷ்குமார் (24), புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜி (27) என்பது தெரிய வந்தது.

இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது தங்கராசுவை கொல்ல கூலிப்படை தலைவனான சுவிட்லின் தங்களுக்கு தலா ரூ.500 கொடுத்ததாகவும், பின்னர் மீதி பணத்தை தருவதாக கூறியதையடுத்து தங்கராசுவை அரிவாளால் வெட்டி கொன்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூலிப்படை தலைவன் சுவிட்லினை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்ளும் பாடகர்!!
Next post தேர்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!!