வேன் மோதி பாடசாலை மாணவன் பலி!!
Read Time:49 Second
குருநாகல் – புத்தளம் வீதியின் வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11 வயதான குறித்த மாணவன் மீது வேன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, பலியாகியுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating