திண்டுக்கல் அருகே உறவினர் வீட்டில் பெண் தற்கொலை!!
Read Time:59 Second
திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டையை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி போதும்பொண்ணு (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது.
போதும்பொண்ணு கடந்த சில ஆண்டுகளாக நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று அவர் திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பின்புறம் சென்ற அவர் அங்கு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த உறவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating