ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திருப்பத்தூரில் உள்ள கல்லறைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகள் ஹேமலதா (வயது 19). கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சந்தோஷ்ஆனந்த் (21). ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, திருப்பத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஹேமலதாவும் படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ்ஆனந்திற்கும், ஹேமலதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர்.
கடந்த 1–ந் தேதியன்று காதல்ஜோடியான சந்தோஷ்ஆனந்தும், ஹேமலதாவும் வீட்டைவிட்டு வெளியே சென்று, ஜலகம்பாறையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் ஹேமலதாவின் தந்தை ஆறுமுகம் தனது மகளை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
போலீசார் தேடி வருவது காதல்ஜோடிக்கு தெரியவரவே, இருவரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, அவர்களை சமாதானம் செய்து காதல்ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
Average Rating