அநுராதபுரம் வைத்தியசாலையில் திடீர் தீ!!
Read Time:56 Second
6 மாடிக் கட்டிடம் கொண்ட அநுராதபுரம் வைத்தியசாலையின் ´பேராசிரியர் பிரிவு´ என்ற கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கீழ் மாடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பிரிவில் இன்று (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு பிரிவு, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Average Rating