தோட்ட அதிகாரியை தாக்கிய கிராம சேவகர் கைது!!
Read Time:53 Second
புத்தளம் – நாகவில்லு பிரதேசத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) இரவு இத்தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால பகையால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தோட்ட அதிகாரி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கிராம சேவகர் புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Average Rating