சேலத்தில் இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 57 Second

6903df27-15c9-4693-9a53-4ff7760752f5_S_secvpfசேலம் மணியனூர், எஸ்.ஆர்.எம். தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (வயது 29).

இவர் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் சரவணன் மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். கல்பனாவின் உறவினர் மற்றும் பெற்றோர் வீட்டுக்கும் சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை.

இதையடுத்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் வேலைக்கு சென்ற எனது மனைவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. மாயமான எனது மனைவி கல்பனாவை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாயமான அன்று வெள்ளை கலர் பூ போட்ட சிவப்பு கலர் சேலை அணிந்திருந்தார். மேலும் அவரது உடலில் உள்ள மச்சம், காய தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கல்பனாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர் வேலை செய்து வந்த நிறுவனத்திலும், அங்கு பணிபுரியும் நபர்கள் குறித்தும், அங்கிருந்து அவர் எத்தனை மணிக்கு வீடு திரும்பினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ. இரண்டரை லட்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும்-கரன்சியுமாக கைது!!
Next post அதிபர் வீடு திரும்பினார்: நடந்தது என்ன?