அதிபர் வீடு திரும்பினார்: நடந்தது என்ன?
Read Time:1 Minute, 28 Second
கடந்த வாரம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட ராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றிரவு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய ஹேவாவித்தாரண பாடசாலையின் அதிபர் நாகசிங்க சித்ரபால என்பவரே வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாடசாலையின் கணினி ஆய்வுகூடம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்பதாக அதிபர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போன வேளை காற்சட்டை அணிந்திருந்த அதிபர் நேற்று இரவு சாரம் அணிந்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அவர் ராஜகிரிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என வாக்குமூலம் அளித்ததுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating