உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!

Read Time:1 Minute, 42 Second

ffdb1905-a746-4ee5-a0af-c3e5c91d7624_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே ஊரில் உள்ள தாத்தா – பாட்டி பொறுப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது 6 வாலிபர்கள் வந்து அவளை கற்பழிக்க முயன்றனர். அவர்களது ஆசைக்கு உடன்படாத சிறுமி 6 பேருடனும் போராடினாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேர் கும்பல் சிறுமி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டனர். இதில் சிறுமியின் உடல் முழுவதும் எரிந்து கருகியது.

சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிவந்து 70 சதவீத தீக்காயங்களுடன் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. ரதோர் சென்று விசாரணை நடத்தினார். 6 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு முயற்சி பிரிவுடன் கொலை வழக்கும் பதிவு செய்து கடுமையான தண்டனை கிடைக்கச்செய்வோம் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!
Next post அடுத்த ரூ 100 கோடி அஜித் படம் தான்!!