ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கேரளாவிற்கு கடத்திய கும்பல்!!

Read Time:1 Minute, 28 Second

33d662fb-334e-4529-abc8-88096105c5e3_S_secvpfஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கல்லுபட்டியை சேர்ந்த செல்வன் மகள் சத்யா(17). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரது உறவினர் செல்வராஜ் மகன் செல்வகுமார் (26). இவர் கேரளாவில் பைனான்ஸ் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.

செல்வகுமார் அடிக்கடி சத்யாவை பார்க்க வந்த போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சம்பவத்தன்று செல்வகுமார் தனது நண்பர்களான செம்மடைபட்டியை சேர்ந்த பிரபு, கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து சத்யாவை காரில் கடத்தி சென்றார்.

இதுகுறித்த தகவல் சத்யாவின் தாய் பத்மாவதிக்கு தெரியவரவே அவர் வீட்டில் சென்று கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் சத்யாவை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து இடையக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை!!
Next post இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!