ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை மரண படுக்கையில்!!
Read Time:1 Minute, 21 Second
மடு – கச்சனாமருதமடு பிரதேசத்தில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
விஷம் அருந்திய குழந்தை பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விஷம் அருந்திய தந்தை பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக இதனால் ஏற்பட்ட மனக்கஸ்டத்தில் தந்தை தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் குறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating