இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் 37 பேர் கைது!!
Read Time:1 Minute, 5 Second
இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற நிலையில், அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் இருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 37 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் சிலாபம், மாரவில மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating