நாய் மற்றும் பூனையை உணவாகக் கொள்ளும் சுவிஸ் மக்கள் !!
Read Time:1 Minute, 16 Second
சுவிஸ் மக்கள் நாய் மற்றும் பூனையை உணவாக உட்கொள்வதை அரசு தடை செய்யவேண்டும் என விலங்குகள் உரிமைக் குழு தெரிவித்துள்ளது. சுவிஸில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக பூனை மற்றும் நாய் கறி உண்பதாகவும் அதனை அரசு தடை செய்யவேண்டும் என்றும் விலங்குகள் உரிமைக்குழு சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில் சுவிஸில் சுமார் மூன்று சதவிகித மக்கள் பூனை அல்லது நாய் கறியினை இரகசியமாக உண்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக லூசெர்ன், அப்பேன்சல், ஜூரா மற்றும் பெர்ன் மண்டலத்தில் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவிஸ் சட்டத்தில், நாய் மற்றும் பூனைகளை உண்பதற்கு இதுவரை எந்தவித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating