தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!
Read Time:1 Minute, 19 Second
குஜராத் மாடல் அழகி சாந்தினி ராஜ்கவுர், வறுமையின் காரணமாக தன்னை விற்க இருப்பதாக பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர் என்பவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரது தாய் பக்கவாத நோயாலும், தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில் உள்ளதாலும், அவர் தன்னை விற்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து சாந்தினி, “என் பெற்றோரைக் காப்பாற்றுவதற்கு என்னிடம் பண வசதி கிடையாது. உதவி கேட்கவும் யாரும் இல்லை. நான் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அறிவிப்பைப் பார்த்ததும் பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். என்னைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை” என்று கூறியுள்ளார்.
Average Rating