பெருந்துறையில் பட்டதாரி பெண் மாயம்!!

Read Time:1 Minute, 45 Second

74765c43-80a5-4f39-8869-b508e861c49f_S_secvpfபெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கிரில் கேட் தயாரிக்கும் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது மகள் ரம்யா (வயது 23). பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து உள்ளார்.

இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது தந்தை கண்டித்தார்.

இப்படி ரொம்ப நேரம் யாரிடம் செல்போனில் பேசுகிறாய். இனி இப்படி போனில் பேசுவதை பார்த்தால் போனை பிடுங்கி விடுவேன் என்று கூறினாராம். தந்தை கண்டித்ததால் ரம்யா மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் வழக்கமாக செல்லும் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று வருவதாக கூறி சென்ற ரம்யா பிறகு வெகு நேரம் வரை திரும்பி வரவில்லை.

இதனால் ரம்யாவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. அவர் எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இது பற்றி பெருந்துறை போலீசில் தங்கமணி புகார் செய்து உள்ளார் அதில் காணாமல் போன தனது மகள் ரம்யாவை கண்டுபிடித்து கொடுக்கும் படி கூறிடி உள்ளார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!
Next post மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை!!