ஜார்க்கண்ட்: சூனியம் வைத்ததாக கூறி கழுத்தை அறுத்து தம்பதியர் படுகொலை!!
Read Time:51 Second
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து இங்குள்ள ஓப்ரா என்ற கிராமத்தில் வசித்துவந்த பேக்கு நாயக் மற்றும் அவரது மனைவி அசாஸ்தி தேவி ஆகியோரை அடையாளம் தெரியாத சில நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
இதேபோல், இங்குள்ள ரக்கட் கிராமத்தை சேர்ந்த மூதாட்டியையும் சூனியம் வைத்ததாக சந்தேகித்து சிலர் கொன்றுள்ளனர். இந்த 3 கொலைகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating