குடும்ப பிரச்சனையால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 4 Second
நெல்லை மாவட்டம் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் துரைபாண்டி. இவரது மனைவி சுடர் ஒளி. இவர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு துரைப்பாண்டி சேர்மாதேவி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு இடத்தில் வைத்து அவர் விஷத்தை குடித்ததாக தெரிகிறது. இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குடும்ப தகராறு காரணமாக போலீஸ்காரர் துரைப்பாண்டி விஷம் குடித்ததாக தெரிகிறது. இதுபற்றி சேர்மாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating