‘பொது வேட்பாளருக்கு கொடி போட்டால் உங்கள் மீது குண்டு போடுவோம்’!!
Read Time:1 Minute, 9 Second
பொது எதிரணி உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கெலிஓயா நகரில் கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஐதேக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.30 அளவில் கெலிஓயா நகருக்கு வந்த உடுநுவர பிரதேச சபையின் தலைவர் பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினர் தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உடுநுவர ஐதேக அமைப்பாளர் லக்கி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
´பொது வேட்பாளருக்கு கொடி போட்டால் உங்கள் மீது குண்டு போடுவோம்´ என்று மிரட்டியவாறு பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினர் ஆதரவாளர்களை தாக்கி கொடிகளை அகற்றி ஆற்றில் வீசியதாக லக்கி ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
Average Rating