நேபாளத்தில் திருவிழாவை காணச்சென்ற பீகார் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது!!
பீகாரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேபாளத்தில் கற்பழிப்பட்டார். இதுதொடர்பான 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தில் உலகத்திலேயே அதிகமாக மிருகங்களை பலி கொடுக்கும் காதிமை என்ற விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கொண்டாடப்பட்டது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மாடுகள் வெட்டப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சென்றனர்.
பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை ஒரு கும்பல் அருகில் உள்ள தனிமையான இடத்திற்கு தூக்கிச் சென்று கொடூரமாக கற்பழித்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் கூச்சல் போட்டார்.
அவரது அலறல் சத்தம் அந்த வழியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கேட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காப்பாற்றினார்கள். அத்துடன் அவரை அருகில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் சேவை மையத்திற்கு அழைத்துச் சென்று உணவு, உடை வழங்கினர். கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating