இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதில்லை! தமிழக மீனவர்கள் முடிவு!!
Read Time:45 Second
சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஜெகதாரப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
Average Rating